14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் சோதனை..! விரும்பினால் இலங்கைக்குள் நுழையலாம், இல்லையேல் திரும்பி செல்லுங்கள். அறிவித்தல்..

ஆசிரியர் - Editor I
14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் சோதனை..! விரும்பினால் இலங்கைக்குள் நுழையலாம், இல்லையேல் திரும்பி செல்லுங்கள். அறிவித்தல்..

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது.  

குறிப்பாக தனிமைப்படுத்தல் சோதனையில் சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டவர்களை தங்கவைத்திருப்பதுடன், சோதனைக்குட்படாதவர்களை தேடி கண்டுபிடித்து சோதித்துக் கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர்கள் சிலர் தனிமைப்படுத்தல் சோதனைக்கு மறுக்கும் நிலையில், இன்றைய தினம் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களிடம் விமானப்படையினர் ஒரு விடயத்தை மட்டுமே கூறியிருக்கின்றனர். 

அதாவது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சோதனை கட்டாயம் உண்டு விரும்பினால் பேருந்தில் ஏறி இலங்கைக்குள் நுழையலாம், இல்லையேல் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்புங்கள்என்பதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு