அவசரமாக மஹாநாயக்க. அஸ்கிாிய பீடங்களின் மஹாநாயக்கா்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க..! ஊடகங்களுக்கு இருட்டடிப்பு..

ஆசிரியர் - Editor I
அவசரமாக மஹாநாயக்க. அஸ்கிாிய பீடங்களின் மஹாநாயக்கா்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க..! ஊடகங்களுக்கு இருட்டடிப்பு..

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின்னர் உட்கட்சி மோதல் வலுப்பெற்றிருக்கும் நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநா யக்கர்களை சந்தித்து பேசியிருக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில், பௌத்த தலைமைப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக சந்தித்த நிலையில் 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதையும் தவிர்த்துக்கொண்டார்.ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்களிடம் ரணில் யோசனை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பங்களை ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்காக ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு