தன்னையும் மனைவியையும் சேர்த்துவைக்க கோரி வவுனியா நகரில் மரத்தில் ஏறி கணவன் நூதன போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தன்னையும் மனைவியையும் சேர்த்துவைக்க கோரி வவுனியா நகரில் மரத்தில் ஏறி கணவன் நூதன போராட்டம்..

பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளார்.

நீண்டநேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது.

பின்னர் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மரத்தில் இருந்து கீழே இறங்கியமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு