அடையாளம் காணப்படாத பெண்ணின் சடலம் வீதியில் கிடந்து மீட்பு..

ஆசிரியர் - Editor I
அடையாளம் காணப்படாத பெண்ணின் சடலம் வீதியில் கிடந்து மீட்பு..

நுவரெலியாவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் நேற்று மாலை (19) நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீதியோரத்தில் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.  

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து மருத்துவ உதவி அதிகாரிகள் குறித்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு வீதியோரத்தில் கிடக்கும் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு