அமைச்சர் டக்ளஸ் வாக்களித்தார்...

ஆசிரியர் - Editor I
அமைச்சர் டக்ளஸ் வாக்களித்தார்...

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார்.

ஐனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந் நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு தொடர்ந்து 8.30 மணிவரையான ஒன்றரை மணித்தியாலத்திற்குள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8.7 வீத வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்தும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு