பெரும் சர்ச்சையை உண்டாக்கிய வெள்ளைவான் சாரதி சிக்கலில்..! குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
பெரும் சர்ச்சையை உண்டாக்கிய வெள்ளைவான் சாரதி சிக்கலில்..! குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை ஆரம்பம்..

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக ஊடகவியலா ளர் சந்திப்பை நடாத்திய தன்னை வெள்ளைவான் சாரதி என அடையாளப்படுத்திய நபருக் கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது. 

கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 திகதி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு 

சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக பணியாற்றியதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு