கிளிநொச்சி இளைஞன் கடத்தல்..! 7 முஸ்லிம்களுக்கும், 2 சிங்களவா்களுக்கும் 10 ஆண்டு சிறை. யாழ்.மேல் நீதிமன்றம் அதிரடி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி இளைஞன் கடத்தல்..! 7 முஸ்லிம்களுக்கும், 2 சிங்களவா்களுக்கும் 10 ஆண்டு சிறை. யாழ்.மேல் நீதிமன்றம் அதிரடி..

கிளிநொச்சி இளைஞனை கடத்தி சென்றபோது கைது செய்யப்பட்ட 7 முஸ்லிம்கள் மற்றும் 2 இரு சிங்களவா்கள் உட்டபட 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்ட ணை வழங்கி யாழ்.மேல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. 

மொகொமட் நஜிமுடீன் மொகொமட் சியாம், மொகமட் இப்ராஹிம் மரிக்கார் மொகொமட், மொகொமட் சஹீட் மொகொமட் ஹில்மி, மொகொமட் பைஸால் மொகொமட் பஸ்லு, வர்ணகுலசூர்ய ஜூட் ஜானக பெர்னாந்து, 

டாவுட் ஷாகி மொகொமட் அசான், ஹேரத் பத்திரணாலேக வந்தனா குமாரதுங்க, சரிஜோன் மொகொமட் ரிஸ்வான் மற்றும் அப்துல் ரஹிட் மொகொமட் நிஸான்டீன் ஆகிய 9 பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிராம் விஜிதன் என்பவர் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டார்.ஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று 

சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டவர், சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

3 லட்சம் ரூபா பணத்தை வாங்கிக் கொண்டு கஞ்சாவை வழங்காத காரணத்தினால், தாம் அவரை கடத்திச் சென்றதாக சந்தேகநபர்கள் 9 பேரும் தெரிவித்திருந்தனர் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18ஆம் திகதி கிளிநொச்சியில் 

சிறிராம் விஜிதன் என்பவரைக் கடத்தும் பொது நோக்குடன் சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராகச் செயற்பட்டமை,சிறிராம் விஜிதனை கடத்தி சட்டவிரோதமாகச் சிறைப்படுத்தும் 

பொது நோக்குடன் செயற்பட்ட கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை, சிறிராம் விஜிதனின் உடமையிலிருந்த 58 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கமாலை, 36 ஆயிரம் ரூபா பெறுமதியான கைச்சங்கிலி மற்றும் 24 ஆயிரம் ரூபா 

பெறுமதியான மோதிரம் என்பவற்றைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரிகள் 9 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி 

சட்ட மா அதிபரால் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விளக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்று வந்தது. 

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரிகள் சார்பில் நா.சிறிகாந்தா முன்னிலையானார்.விளக்கம் சமர்ப்பணங்கள் நிறைவில் வழக்கு தீர்ப்புக்காக 

இன்று தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தது. எதிரிகள் மீதான 5 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு 9 பேரும் 

குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். இதேவேளை கடத்தலுக்கு பயன்படுத்திய டிபென்டா் ரக வாகனம் உாிமையாளாிடம் ஒப்படைக்கப்பட்டது. 


 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு