அடுத்தடுத்து இரு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு..! விசேட பொலிஸ்படை அமைத்து விசாரணை..

ஆசிரியர் - Editor I
அடுத்தடுத்து இரு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு..! விசேட பொலிஸ்படை அமைத்து விசாரணை..

பொகவந்தாலாவ- டிக்கோயா பகுதிகளில் இன்று அதிகாலை 2 கோவில்கள் உடைக்கப்பட்டு நகைகள், பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளது. 

பொகவந்தலாவயில் ரொப்கில் வானகாடு தோட்டத்திலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமும், டிக்கோயா சாஞ்சிமலை பகுதியில் ராமர் கோவில் உட்பட இரண்டு கோவில்கள் 

இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் 

பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை, பெருந்தோட்டப்பகுதிகளில் கடந்தகாலங்களில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு புராதன பொருட்கள் கொள்ளையிடிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு