பலாலி விமான நிலையத்திற்கு முண்டியடிக்கும் இந்திய விமானசேவை நிறுவனங்கள்..!

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையத்திற்கு முண்டியடிக்கும் இந்திய விமானசேவை நிறுவனங்கள்..!

பிராந்திய விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்டுவரும் யாழ்.பலாலி விமான நிலையத்தின் ஊடாக விமானசேவை நடாத்துவதற்கு இந்திய விமான நிறுவனங்கள் பல ஆா்வம் காட்டிவருவ தாக சிவில் விமானசேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா தெரிவித்தார்.

எயர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனம், இந்தியாவில் 54 நகரங்களை இணைக்கும் வகையில், உள்நாட்டு விமான சேவைகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திடம், பலாலி விமான நிலையத்துக்கு இயக்கக் கூடிய, 70 – 72 ஆசனங்களைக் கொண்ட ATR 72-600 ரகத்தைச் சேர்ந்த 18 விமானங்களும், 48 ஆசனங்களைக் கொண்ட 

 ஒரு ATR 42-320 விமானமும் உள்ளது. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அரசும், இந்தியாவில் பாஜக அரசும் ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்கள் கொழும்புக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு, இலங்கை உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது. போயிங் B737 மற்றும் எயர்பஸ் A320 விமானங்களை 

இயக்கக் கூடிய வகையில், இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக, பலாலியை அபிவிருத்தி செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. “தற்போது பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒக்ரோபர் மாதம் இங்கிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், 

ரேஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார்.பலாலி விமான நிலையத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு முகவர் அமைப்புகளான குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.குறுகிய காலஅவகாசத்தில் பலாலியில் குடிவரவு மற்றும் சுங்க பணிகளை ஆரம்பிக்க முடியும் 

என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க தெரிவித்தார். பலாலியில் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. பலாலி் விமான நிலையம் செயற்பாட்டுக்கு வரும் போது நாங்களும் எமது பணிகளை ஆரம்பிக்கத் தயாராக இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு