மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் நோன்புப்பெருநாள் தொழுகை !!

ஆசிரியர் - Admin
மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் நோன்புப்பெருநாள் தொழுகை !!

மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் இடம்பெற்றது.

அசாதாரண சூழ்நிலையிலிருந்து நாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் முஸ்லிங்கள் அதிகமாக கூடும் நிகழ்வு என்பதால் சம்மாந்துறை பொலிஸ் இருவர் இன்றைய தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவில் கலந்து கொள்ள வழமைபோன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு பொதுமக்கள் ஆவலுடன் கலந்துகொண்டிருந்தனர்.

அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.ஆர்.எம். சப்ராஸ் பெருநாள் தொழுகையையும் குத்பா உரையையும் நிகழ்த்தினார்.

அபுஹின்ஸா.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு