110 போ் காயம்..! 8 போ் கைது..

ஆசிரியர் - Editor I
110 போ் காயம்..! 8 போ் கைது..

கடந்த ஞாயிற்றுக் கிழமை புதுவருட தினத்தில் மட்டும் வவுனியா மாவட்டத்தில் மட்டும் 110 போ் அடிதடியால் காயமடைந்து வைத்தியசாலையில் சோ்க்கப்பட்டுள்ளதுடன், 8 போ் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா். 

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு, அடிதடி, குழு மோதல், வாள்வெட்டு, வாகன விபத்து என்பன காரணமாகவே காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், ஓட்டோ ஒன்றும் சேதடைந்த நிலையில் வவுனியாப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இக்குழு மோதல் தொடர்பில் மூவர் வவுனியா குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும், பிறிதொரு பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், புதுவருட தினத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் வவுனியா போக்குவரத்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு