வட்டுவாகல் கடற்படைத் தளம் முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்கள்!

ஆசிரியர் - Admin
வட்டுவாகல் கடற்படைத் தளம் முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்கள்!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியிலுள்ள கடற்படையின் “கோத்தபாய” முகாமிற்கு முன்பாக வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை இன்று காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை காட்சிப்படுத்தப்பட்டன.

நீதி - ஏக்கம் - கண்ணீர் எனும் தொனிப்பொருளில் உத்தரிப்புகளின் அல்பம் எனும் தலைப்பின் கீழ் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் புகைப்படங்களும், அவர்களுக்காக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு