இணுவை கந்தனுக்கு காப்பெற் வீதிகள்..

ஆசிரியர் - Editor I
இணுவை கந்தனுக்கு காப்பெற் வீதிகள்..

ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க உலகபெரு மஞ்சத்தை தன்னகத்தே கொண்ட இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் சுற்றுவட்ட வீதிகள் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளது. 

இததற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் கோவில் வீதி மற்றும் அதனோடு இணைந்த 

கிராம வீதிகள் காப்பற் வீதிகளாக அமைக்கப்படவுள்ளன. வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்ஷன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், 

வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் வதனி, யாழ்மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி ஒப்பந்தகாரர் மற்றும் நாடா ளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் 

வீதிப்பணிகள் தொடர்பாக இன்று நேரில் ஆராய்ந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு