நான் ஒன்றும் செய்யவில்லை, ஊடகங்கள் மீது பழியைபோட்டுவிட்டு தள்ளி நிற்கிறாா் ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
நான் ஒன்றும் செய்யவில்லை, ஊடகங்கள் மீது பழியைபோட்டுவிட்டு தள்ளி நிற்கிறாா் ஆளுநா்..

ஐ.நா மனித உாிமைகள் ஆணையாளருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து கூறிய விடயங்களை ஊடகங்கள் தவறாக பிரசுாித்து விட்டதாகவும், அதற்காக தாம் வருந்துவதாகவும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வருத்தம் தொிவித்துள்ளாா். 

இலங்கை தொடர்­பான அறிக்­கை­யில் தவ­று­கள் இருப்­பதை ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ளர் தம்­மைச் சந்­தித்த போது ஒப்­புக் கொண்­டி­ருந்­தார் என்­றும், அது தொடர்­பான தனது அதி­கா­ரி­க­ளைக் கண்­டித்­தார் என்­றும், வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் கூறி­யி­ருந்­தார்.

இதற்கு மறுப்­புத் தெரி­வித்து, ஐ.நா மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் மிச்­சேல் பாச்­லெட் அம்­மை­யார் நேற்­று­முன்­தி­னம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். இதை­ய­டுத்து, வடக்கு ஆளு­நர், வருத்­தம் தெரி­வித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

ஜெனி­வா­வில் இருந்து திரும்­பிய பின்­னர் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­ பில், ‘நேர்­கா­ண­லின் சில பகு­தி­கள் துரதிஷ்­ட­வ­ச­மாக, குறிப்­பாக ஆங்­கில ஊட­கத்­தில், மொழி­யாக்­கம் அல்­லது தெரி­யாத கார­ணங்­க­ளால், உண்­மை­யான அர்த்­தத்தை இழந்து விட்­டது வருத்­தத்­துக்­கு­ரி­யது. 

எல்லா கலந்­து­ரை­யா­டல்­க­ளும் முழு­மை­யான இரு­த­ரப்பு ஆத­ர­வு­டன் இடம்­பெற்­றன. மனித உரிமை ஆணை­யா­ளர் பாச்­லெட் அம்­மை­யார் முன்­மா­தி­ரி­யான இரா­ஜ­தந்­திர ஒழுங்­கை­யும் திறன்­க­ளை­யும் வெளிப்­ப­டுத்­தி­ய­வர். அவரை நான் மிக­வும் மதிக்­கி­றேன்.’ என்று ஆளு­நர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு