ஏக்கிய இராச்சிய ஒற்றையாட்சி அல்ல. ஊடகங்கள் மீது பாய்ந்த சுமந்திரன்.

ஆசிரியர் - Editor I
ஏக்கிய இராச்சிய ஒற்றையாட்சி அல்ல. ஊடகங்கள் மீது பாய்ந்த சுமந்திரன்.

ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. அதனை விட ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என இடைக்கால அ றிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. இப்படி இருக்க ஒற்றையாட்சிக்கு நாங்கள் இணங்கியதாக ஊடக ங்கள் தொடர்ந்து பொய்யை சொல்கின்றன. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் கூறினார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற் கான பொது கூட்டம் இன்று யாழ்.ஓஸ்மானியா கல்லூரி வீதியில் நடைபெற்றிருந்தது. இ ந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் மேற்கண்டவா று கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என கூறப்பட்டிருக் கின்றது. 

மேலும் ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல அது ஒருமித்த நாடு என் பதும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருமித்த நாடு என்பதற்கே நாங் கள் இணங்கினோம். ஆனால் நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டோம் என ஊடகங்கள் பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றன.

ஊடகங்கள் பொய் சொல்ல வேண்டாம் என நான் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்க என்னை பார்த்து சிரிப்பதுபோலவும், மக் களை பார்த்து ஏளனம் செய்வதுபோலவும் ஊடகங்கள் திரும்ப திரும்ப பொய்யை சொல் கின்றன. ஊடகங்கள் நினைக்ககூடாது தாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று. 

மேலும் சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றியடைய இயலாது என சொல்கிறார்கள். ஊடகங்களுக்கு பயந்து நாங்கள் மக்களிடம் சென்று பொய்யை சொல் ல இயலாது. எவ்வளவு பலமான ஊடகங்களாக இருந்தாலும் நாங்கள் மக்களிடம் செ ன்று உண்மையைதான் சொல்வோம். பொய் சொல்லும் ஊடகங்களை பகைத்தே நாங்கள் தேர்தலில் வெற்றியடையவேண்டும். 

70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் சொல்லணா துயரங்களை சந்தித்தார்கள். அந்த துயரங்க ளுக்கு ஒரு தீர்வினை காணவேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சித்து கொண்டிருக்கையில், சில அரசியல் தரப்புக்களைப்போல் ஊடகங்களும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. 

இடைக்கால அறிக்கை யில் தமிழ் மக்களை ஏற்காத ஒரு விடயம் கூட இடம்பெறவில்லை. எனவே ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்தவேண்டும், நீங்களாக திருந்தவேண்டும். இல்லையேல் திருத் தப்படுவீர்கள். மக்களாக ஊடகங்களை தூக்கி எறியும் நிலை உருவாகும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு