தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்..

ஆசிரியர் - Editor I
தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்..

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காரணவாய் தெற்கை சேர்ந்த 70 வயதான மூதாட்டியான குணராஜசிங்கம் ஞானேஸ்வரி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார் குறித்த மூதாட்டி வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். 

நேற்றைய தினம் வியாழக்கிழமை மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத அயலவர்கள் , மூதாட்டியின் வீட்டினுள் சென்று பார்த்த போது மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு