இராணுவத்தளபதியுடன் சந்திப்பு:முதலமைச்சரிற்கு கதவடைப்பு!

ஆசிரியர் - Admin
இராணுவத்தளபதியுடன் சந்திப்பு:முதலமைச்சரிற்கு கதவடைப்பு!

யாழ் குடாநாட்டிற்கு இன்றயதினம் விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்றக்குழுவினர் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியை சந்தித்தபோதும் வடமாகாண முதலமைச்சரினை சந்திப்பதை தவிர்த்துள்ளது.எனினும் அரசின் பிரதிநிதியான ஆளுநர் றெயினோல்கூரேயை சந்தித்து கலந்துரையாடினர்.

பலாலி விமான நிலையத்தினை காலை 10 மணியளவில் வந்தடைந்த ஐவர் அடங்கிய குழுவினர் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராய்ச்சியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் நண்பகல் 12.30 மணியளவில் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரணில் ஜெயவர்த்தன, கிறிஸ் கிறீன், டான் காடன், மிச்செலி டொனாலன், ஹெலி தொல்ஹாஸ் ஆகியோரை இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆளுநருடன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலர் எவ் எக்ஸ் செல்வநாயகம் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.

யுத்தத்தின் பின்னரான வடமாகாண மக்களின் காணிகள் விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் மீள்குடியேற்றம் பாதுகாப்புத்தளர்வு மேற்கொள்ளப்பட்டுவரும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

எனினும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரினை புறக்கணித்தமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு