எனக்கு உல்லாச பங்களாவா? இல்லவே இல்லை!

ஆசிரியர் - Editor I
எனக்கு உல்லாச பங்களாவா? இல்லவே இல்லை!

அரசாங்கம் எனக்கு உல்லாச பங்களா வழங்கியிருக்கிறதா? இல்லவே இல்லை. சுரேஷ் பிறேமச்சந்திர ன் அப்பட்டமான பொய்யை சொல்கிறார். அதனை ஊடகங்களும் முன்னுரிமை கொடுத்து பிரசுரித்துக் கொண்டிருக்கின்றன என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு அண்மையில் நல்லூர் இளஞ்க லைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பேசிய சுரேஸ் பிறேமச்சந்திரன் அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே நன்மைக ளை பெற்றிருக்கின்றார்கள். 

மற்றபடி தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொழும்பு 7ல் உல்லாச பங்களா வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன் எ னவும் கூறியிருந்தார். இந்த கருத்தை இன்று பருத்துறையில் நடைபெற்ற உள்@ராட்சி சபை தேர்தலு க்கான 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுமந்திரன் மறுத்து கருத்து தெரிவிக்கு ம்போதே மேற் கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கொழும்பில் ஒரு விலாசத்தை சொல்லி அந்த விலாசத்தில் எனக்கு ஒரு பங்களா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு 135 ரூபாய் வாடகை

எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். அந்த கருத்து அப்பட்டமான பொய். அவர் கூறியிரு க்கும் அந்த விலாசத்தில் பங்களாவே இல்லை. அவ்வாறு பொய்யான ஒரு கருத்தை ஊடகங்கள் முன் னுரிமை கொடுத்து முதல் பக்கத்தில் செய்தியாக பிரசுரித்திருக்கின்றது. இவ்வாறே எமக்கு எதிரான பொய்கள்

தொடர்ச்சியாக பரப்பட்டு கொண்டிருக்கின்றன என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு