வெளிநாட்டில் இருந்து வந்த யாழ் நபர் விமானநிலையத்தில் கைது!

ஆசிரியர் - Editor II
வெளிநாட்டில் இருந்து வந்த யாழ் நபர் விமானநிலையத்தில் கைது!

நாட்டிற்குள் சட்டவிரோதமாக அமெரிக்க டொலர் மற்றும் சிகரட்டுக்களை எடுத்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமானத்திற்கு வந்துள்ளார்.

சந்தேக நபரின் பயணப் பொதியில் இருந்த 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், 120 சிகரட் பொதிகளையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

யாழ், சாவக்கச்சேரியை சேர்ந்த 41 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்த அமெரிக்க டொலர்களின் பெறுமதி 40 லட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு