ஏழாலையில் உள்ளுராட்சி வேட்பாளருக்கு கழிவோயில் வீச்சு

ஆசிரியர் - Admin
ஏழாலையில் உள்ளுராட்சி வேட்பாளருக்கு கழிவோயில் வீச்சு

யாழ். ஏழாலையில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் தி. பிரகாஷ்சின் பெயர் மற்றும் போட்டியிடும் சின்னம் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் கழிவோயில் வீசப்பட்டுச் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். ஏழாலை மற்றும் குப்பிளான் பகுதிகளின் வீதிகளின் பல்வேறிடங்களிலும் பிரகாஷ்சின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கழிவோயில்  வீசப்பட்டுள்ளது. நேற்று(05) நள்ளிரவு இனம் தெரியாத சிலரால் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரகாஷ்சின் பெயர் மற்றும் போட்டியிடும் சின்னம் என்பன கழிவோயில் வீசப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டுள்ள போதும் அதனருகே ஏழாலைப் பகுதியில் ஐக்கியதேசியக் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரொருவரின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த போதும் ஓரிடத்தைத் தவிர ஏனைய இடங்களில் அவற்றிற்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தப்படாமல் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு