யாழில் வீடொன்றில் திடீரென தீ பரவல்

ஆசிரியர் - Editor II
யாழில் வீடொன்றில் திடீரென தீ பரவல்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் ஐந்துமாடி குடியிருப்புக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டிலிருந்த ஐந்து பேரும் தெய்வாதீனமாக தப்பித்துள்ளனர்.

குறித்த வீட்டின் அறை ஒன்றுக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாகவே தீ பரவியள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த அறையில் மட்டுமே தீ பரவியதால் வீட்டிலிருந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தீ பரவிய அறைக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் அத்தியவசிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

மேலும், இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ். மாநகர தீயணைப்புப் பிரிவினரின் கடும் போராட்டத்திற்கு பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு