யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு
அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்பலைக்கலைகழக மாணவர்கள் மாபெரும் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு யாழ் மாவட்ட செயலகம் வரை செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுர சிறைச்சாலையில் 3 தமிழ் அரசியல் கைதிகள் 30 நாட்களைக் கடந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
கடுமையான போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறித்த மூவரும் தமது போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.
இந்த இவர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மாபெரும் பேரணி ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் பேரணியாக சென்று நாவலர் வீதியிலுள்ள ஐநா அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை நோக்கி செல்வதாக தெரியவருகின்றது.