யாழ். இணுவில் கிழக்குப் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து முதியவருக்கு கத்திக்குத்து - இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம், இணுவில் கிழக்குப் பகுதியில் நேற்று வீடொன்றுக்குள் புகுந்த இளைஞன் ஒருவர், அங்கு வசித்து வரும் முதியவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தில் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திக் குத்துக் காயங்களுக்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கே.குமாரசாமி (வயது 82) என்ற முதியவரே கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர்கள் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் முதியவரின் வீட்டில் வேலை செய்பவர்கள். அவர்களில் ஒருவரே மதுபோதையில் முதியவரைக் குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது பொலிஸார் தெரிவித்தனர்.