அரசியல் கைதிகளை விடுதலை செய் பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்.

ஆசிரியர் - Editor I
அரசியல் கைதிகளை விடுதலை செய் பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ. தொழில்நுட்ப கல்லூரி, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ( high technical institutes) மாணவர்களும் இணைந்துகொண்டனர்.

பல்கலைக்கழக முன்றலில் இருந்து 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி பலாலி வீதி, நாவலர் வீதி, கோவில் வீதி வழியாக சென்றது.

கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் வீதி வழியாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பேரணி சென்றடைந்தது.

அங்குவைத்து அரசியல் கைதிகள் விடுதலை கோரும் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிகலகப்பட்டு பேரணி நிறைவடைந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு