யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை! -

ஆசிரியர் - Editor II
யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை! -

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில், நீதிபதி இளஞ்செழியனை யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்துப் பேசியிருந்தார்.

புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நீதிபதிக்கு யாழ். இராணுவக் கட்டளை தளபதி புதுவருட வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது பருத்தித்துறையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் நீதிமன்றுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணி இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, அதனை விரைவில் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த காணியினை மீள கையளிக்கும் போது அங்கு மேல் நீதிமன்றத்தினை அமைக்க முடியும் எனவும் நீதிபதி மா.இளஞ்செழியன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த, யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, “குறித்த காணியினை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக” உறுதியளித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு