கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிராக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! -
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரீகன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தனது பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுதல் சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களின் ஊடாக தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரீகன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.