யாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

ஆசிரியர் - Admin
யாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-08.30 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 18 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும்,19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்- 11.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும்,அன்றைய தினம் பிற்பகல்-06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

மஹோற்சவ காலங்களில் தினமும் காலை உற்சவம் காலை-08.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல்-12.30 மணிக்கு நிறைவு பெறும். மாலை உற்சவம் பிற்பகல்-05 மணிக்கு ஆரம்பமாகி இரவு-09.30 மணிக்கு நிறைவு பெறும்.

அத்துடன் தினமும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) இடம்பெறுமென ஆலய நிர்வாகசபை தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு