பிரபல கொள்ளையா்கள் இருவா் கைது, தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் யாழ்.பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
பிரபல கொள்ளையா்கள் இருவா் கைது, தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் யாழ்.பொலிஸாா்..

யாழ்.அாியாலை- பூமங்குளம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து பணம் மற்றும் 16 பவுண் நகை கொள்ளையிட்ட 2 இளைஞா்களை யாழ்.பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

அரியாலை பூமங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உட்பு குந்த திருடர்கள் பணம் மற்றும் 16 பவுண்நகைகளை களவாடி சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் செ ய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் 

அரியாலை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ள னர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 

களவாடப்பட்ட நகைகளை யாழ்.நகர் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் உருக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், 

தொடர்ந்தும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாண காவ ல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு