பெருமளவு போலி நாணயத்தாள்கள் மற்றும் கஞ்சா பீடியுடன் 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
பெருமளவு போலி நாணயத்தாள்கள் மற்றும் கஞ்சா பீடியுடன் 3 போ் கைது..

பெருமளவு போலி நாணயத்தாள்கள் மற்றும் கஞ்சா பீடியுடன் 3 இளைஞா்களை வல்வெட்டித்து றை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

ஆயி­ரம் ரூபா பொறிக்­கப்­பட்ட போலி நாண­யத் தாள்­கள் இரண்டை வைத்­தி­ருந்­தார் என்ற குற்­ றச்­சாட்­டில் ஒரு­வ­ரும், கஞ்சா பீடியை நுகர்ந்­த­னர்

என்ற குற்­றச்­சாட்­டில் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். வல்­வெட்­டித்­து­றை­யி­லேயே மூன்று பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் ஒரு­வர் கர­ண­வா­யைச் சேர்ந்­த­வர் என்­றும், ஏனைய இரு­வ­ரும் வல்­ வெட்­டித்­து­றை­யைச் சேர்ந்­த­வர் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

போலி நாண­யத் தாள்­க­ளு­டன் கைது செய்­யப்­பட்­ட­வர் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கா­கக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளார் என்­றும், 

ஏனைய இரு­வ­ரும் பருத்­தித்­துறை நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் தெரி­விக்­ கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு