பெருமளவு போலி நாணயத்தாள்கள் மற்றும் கஞ்சா பீடியுடன் 3 போ் கைது..
பெருமளவு போலி நாணயத்தாள்கள் மற்றும் கஞ்சா பீடியுடன் 3 இளைஞா்களை வல்வெட்டித்து றை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
ஆயிரம் ரூபா பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள்கள் இரண்டை வைத்திருந்தார் என்ற குற் றச்சாட்டில் ஒருவரும், கஞ்சா பீடியை நுகர்ந்தனர்
என்ற குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையிலேயே மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கரணவாயைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய இருவரும் வல் வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
போலி நாணயத் தாள்களுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார் என்றும்,
ஏனைய இருவரும் பருத்தித்துறை நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக் கப்பட்டது.