சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் வந்தவருக்கு நடந்த சோகம்!!

ஆசிரியர் - Admin
சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் வந்தவருக்கு நடந்த சோகம்!!

திருமண நாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி கல்வயல் பகுதியில் நடந்துள்ளது.

இவரது குடும்பத்தினர் கொழும்பில் வசித்து வந்தமையால், ஒவ்வொரு வருடமும் திருமண நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்புக்கு வந்து திருமண நாளைக் கொண்டாடி வந்தார்.

கல்வயலில் அண்மையில் உயிரிழந்த உறவினர் வீட்டுக்கு வந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார்.

இவரது இறப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்டு பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் விசாரணைகளை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

யாழ்.போதனா மருத்துவமனையில் இறப்பு விசாரணைகளை மேற்கொண்ட திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மருத்துவமனை சட்ட மருத்துவ அலுவலர் மூலம், உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு