வல்­வெட்­டித்­துறை ஊரிக்­காடு பகுதியில் எரிகாயங்களுடன் இளைஞனின் சடலம்!

ஆசிரியர் - Admin
வல்­வெட்­டித்­துறை ஊரிக்­காடு பகுதியில் எரிகாயங்களுடன் இளைஞனின் சடலம்!

யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை ஊரிக்­காடு பகுதியில் உள்ள கோழிப் பண்­ணை­யில் வேலை செய்­யும் இளை­ஞன் நேற்று மாலை சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது உட­லில் எரி­கா­யங்­கள் காணப்­ப­டு­வ­தா­ல், மின்­சாரம் தாக்கி உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்று பொலி­ஸார் சந்­தே­கம் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இடைக்­காடு அக்­க­ரை­யைச் சேர்ந்த விஷ்ணுகு­மார் தனு­சன் (வயது-19) என்ற இளை­ஞனே சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார்.

கோழிப் பண்­ணை­யில் கழி­வுத் தொட்­டிக்­குள் கழி­வு­கள் கொட்­டிக் கொண்­டி­ருந்­த போது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இளை­ஞன் கீழே விழுந்து கிடந்­த­தைக் கண்­ட ஒருவர், அவரை மீட்டு ஊரணி மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்த போதும், அவர் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று மருத்­து­வ­ம­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக சட­லம் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு