யாழ்.பல்கலைக்கழகத்தில் தேசிய கொடிக்கு பதிலாக பறந்தது கறுப்பு கொடி, இலங்கையின் சுதந்திர தினம் தமிழா்களுக்கு காி நாள்..
இலங்கையின் சுதந்திரதினமான இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.
ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திரம் கரி நாளாக பிரகடனம் படுத்திகறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய சுதந்திர தினத்தை கரி நாளாகப் பிரகடனப்படுத்தியது யாழ்.பல்கலைக்கழ க மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கரிநாள் பதாகைகளையும் எமக்கு எப்போது
சுதந்திர தினம்? எனக் குறிப்பிட்டு பல்கலைக்கழகத்தைச் சூழ கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .