யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கடமை நேரத்தில் தகாத உறவு, தாதியா்கள் இருவா் சிக்கினா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கடமை நேரத்தில் தகாத உறவு, தாதியா்கள் இருவா் சிக்கினா்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்டனர் என்று வழங்கப்பட்டன முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள் ளனர் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த நோயாளியின் நிலமை கடுமையாக இருந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரே கடமையில் இருந்துள்ளார். ஏனையோர் கடமை நேரத்தில் காணவில்லை என்று மருத்துவரால் தேடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பிரிவின் அறை ஒன்றை மருத்துவர் திறந்த போது, ஆண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் தகாத உறவில் ஈடுபட்டதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகவே அவர்களை தனது அலைபேசியில் ஒளிப்பதிவு செய்த மருத்துவர், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.

சுமார் 40 வயதுடைய ஆண் தாதிய உத்தியோகத்தரும் சுமார் 28 வயதுடைய பெண் தாதிய உத்தியோகத்தருமே இவ்வாறு தகாத உறவில் ஈடுபட்ட போது ஆடையின்றி ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் மற்றும் சக தாதிய உத்தியோகத்தர்களால் வைத்தியசாலைப் 

பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டது. “உரியவர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்தன. அதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆண் தாதிய உத்தியோகத்தருக்கு எதிரான இதற்கு முன்னரும் பல முறைப்பாடுகள் உள்ளன. 

சம்பவம் தொடர்பில் நிர்வாக ரீதியான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணைகள் நிறைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்படும். சுகாதார அமைச்சே மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு