10 நாட்களில் 380 கிலோ கேரள கஞ்சா மீட்பு, 90 வீதமானவை யாழ்.மாவட்டத்தில் மீட்பு. அதிா்ந்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
10 நாட்களில் 380 கிலோ கேரள கஞ்சா மீட்பு, 90 வீதமானவை யாழ்.மாவட்டத்தில் மீட்பு. அதிா்ந்த பொலிஸாா்..

வடக்கு மாகாணத்தில் 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்பு. 90 சதவீதம் யாழ்ப்பாணத்தில்

வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்டுள்­ள­து­டன், 40 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வில் 90 சத­வீ­த­மா­னவை யாழ்ப்­பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், மன்­ னார் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளி­லும் பெருந்­தொ­கை­யான கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ ளது. வவு­னியா மாவட்­டத்­தில் குறைந்­த­ளவு கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது.

வல்­வெட்­டித்­துறை மற்­றும் பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் மாத்­தி­ரம் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, யாழ்ப்­பா­ணத்­தில் 29 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும், மன்­னா­ரில் 4 பேரும், 

கிளி­ நொச்­சி­யில் 3 பேரு­மாக 40 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு