யாழ்.நீர்வேலியில் விபத்து. சிறுமி உட்பட இருவர் பலி.

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் விபத்து. சிறுமி உட்பட இருவர் பலி.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 6வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சகரவண்டி சாரதியான சிங்காரவேலு பாஸ்கரன் 57 வயது, ராஜ்குமார் டனிஸ்ரா (6வயது) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

மூச்சக்கர வண்டியொன்றும் ஹயஸ் ரக வாகனமொன்றும் நேரூக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற ஹயஸ் வாகனமானது முன்னால் சென்ற வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே பருத்தித்துறையில் இருந்து யாழ்.நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதிதள்ளியுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் இருவருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ் தொடர்பாக ஹயஸ் வாகனத்தின் சாரதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு