பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 1950 மில்லியன் அமைச்சரவை அங்கீகாரம், யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு பறக்கலாம்..

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 1950 மில்லியன் அமைச்சரவை அங்கீகாரம், யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு பறக்கலாம்..

யாழ்.பலாலி விமான நிலையம் 1950 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் புனரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. 

கடந்த ஆண்டு டிசெம்­பர் மாதத்­துக்­குள் முதல் கட்ட அபி­வி­ருத்­திப் பணி­கள் முடி­வ­டைந்து பலா­ லி­யி­லி­ருந்து தமி­ழகத்­துக்­கான விமான சேவை­கள் ஆரம்­ப­மா­கும்.

 என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. சிவில் விமானப் போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளம் அதற்­கான பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. ஆயினும் ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்­டில் 

ஏற்­பட்ட அர­சி­யல் சூழ்ச்­சியை அடுத்து இந்­தப் பணி­கள் கிடப்­பில் போடப்­பட்­டன. ரணில் விக்­கி­ ர­ம­சிங்க கடந்த டிசம்­பர் மாதம் 16 ஆம் திகதி தலைமை அமைச்­ச­ராக 

மீண்­டும் பத­வி­யேற்­ற­தைத் தொடர்ந்து பலாலி விமான நிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் மீள ஆரம்­பிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டன.

அந்­தப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் வடக்கு அபி­வி­ருத்தி, 

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சால் முன்­வைக்­கப்­பட்­டது. அதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு