யாழ் விடுதியில் எமனாக வந்த மாமிச உணவு! கிளிநொச்சி நபரிற்கு நடந்தது என்ன??
வருட இறுதிக் கொண்டாட்டத்தில் அதிக மாமிச உணவுகளை உண்டவர் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியபடி வாந்தியெடுத்தபோது நுரையீரலுக் குள் புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தில் இறப்பு நிகழ்ந்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி அழகாபுரி இராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் (வயது – 40) என்பவuர் உயிரிழந்தார். இவர் 4 பிள்ளைகளின் தந்தை.
யாழ்ப்பாணத்திலுள்ள நகர விடுதி ஒன்றில் வருட இறுதிக் கொண்டாட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அன்று பிற்பகல் கொண்டாட்டம் இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டிருந்த சுரேஸ்குமார் இரவு சுமார் 8 மணியளவில் உறங்கிவிட்டார். அப்போதே அவர் வாந்தியெடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
உணர்வற்றுக் காணப்பட்ட அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டமை தெரியவந்தது. இறப்பு விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மு.உதயசிறி இறப்பு விசாரணை நடத்தினார்.