யாழ் விடுதியில் எமனாக வந்த மாமிச உண­வு! கிளி­நொச்சி நபரிற்கு நடந்தது என்ன??

ஆசிரியர் - Editor II
யாழ் விடுதியில் எமனாக வந்த மாமிச உண­வு! கிளி­நொச்சி நபரிற்கு நடந்தது என்ன??

வருட இறு­திக் கொண்­டாட்­டத்­தில் அதிக மாமிச உண­வு­களை உண்­ட­வர் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

உணவு உட்­கொண்ட பின்­னர் உறங்­கி­ய­படி வாந்­தி­யெ­டுத்­த­போது நுரை­யீ­ர­லுக் குள் புரை­யேறி மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­பட்­டத்­தில் இறப்பு நிகழ்ந்­த­தாக உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

கிளி­நொச்சி அழ­கா­புரி இரா­ம­நா­த­பு­ரத்­தைச் சேர்ந்த செல்­வ­ராசா சுரேஸ்­கு­மார் (வயது – 40) என்­ப­வuர் உயி­ரி­ழந்­தார். இவர் 4 பிள்­ளை­க­ளின் தந்தை.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள நகர விடுதி ஒன்­றில் வருட இறு­திக் கொண்­டாட்­டம் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அன்று பிற்­ப­கல் கொண்­டாட்­டம் இடம்­பெற்­றது.

அதில் கலந்­து­கொண்­டி­ருந்த சுரேஸ்­கு­மார் இரவு சுமார் 8 மணி­ய­ள­வில் உறங்­கி­விட்­டார். அப்­போதே அவர் வாந்­தி­யெ­டுத்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

உணர்­வற்­றுக் காணப்­பட்ட அவரை மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­போது அவர் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­டமை தெரி­ய­வந்­தது. இறப்பு விசா­ரணை மற்­றும் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யின் பின்­னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி மு.உத­ய­சிறி இறப்பு விசா­ரணை நடத்­தி­னார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு