யாழில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்! நள்ளிரவில் அதிரடியாக கைது

ஆசிரியர் - Editor II

யாழ்.அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதி கிராம அலுவலகரின் அலுவலக பலகையினை உடைத்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுவருட பிறப்பு கொண்டாட மகிழ்ச்சியில் மது போதையில் சென்ற 6 இளைஞர்கள் ஜேஷ89 கிராம சேவையாளர் பிரிவின் அலுவலக பலகை உடைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிராம அலுவலகரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அதே இடத்தினைச் சேர்ந்த சுமார் 17 வயது மற்றும் 18 வயதுடைய 6 பேர் இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு