பிளவுகள் அகல முதலமைச்சர் புத்தாண்டில் அழைப்பு!
புத்தாண்டில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்கிடையேயான பிளவுகளை கைவிட்டு நிலைபேறான அரசியல் தீர்விற்கு பாடுபட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஆங்கில புத்தாண்டு செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகையினில் எம்மிடையே காணப்படும் விரோத உணர்வுகள் அனைத்தும் கலையவும் அரசியற்தலைமைகள் தமக்குள் போட்டிப்போட்டுக்கொண்டு வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்கவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
2018ம் ஆண்டு அனைவரிற்கும் சுபீட்சத்தையும் சுகவாழ்வையும் மனஅமைதியையும் புதிய ஆண்டாக திகழ பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.