வடமாகாணசபையின் வினைத்திறன் இன்மையால் பெருமளவு நிதி திறைசேரிக்கு திரும்பியதாம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபையின் வினைத்திறன் இன்மையால் பெருமளவு நிதி திறைசேரிக்கு திரும்பியதாம்..

வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக் காலத்தில் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டுக்காக எந்தவொரு செயற்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை. என கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளதுடன், 

வடமாகாணசபையின் இத்தகைய வினைத்திறனற்ற செயற்பாட்டினால் மாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பெருமளவு நிதி திறைசேரிக்கு திரும்பி சென்றிருப்பதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வர ன் குற்றம் சுமத்தியுள்ளார். 

முல்லைத்தீவு - விஸ்வமடு மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்

'வடக்கு மாகாண சபை கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்தும் பாடசாலைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் சரியான முறையில் கட்டிடங்கள் அமைக்கப்படவில்லை. மைதானங்கள் புனரமைக்கப்படவில்லை மாணவர்களின் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் இருந்த உறுப்பினர்கள் அதனை சரியான முறையில் கையாளவில்லை என்றும் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த ஐந்து வருடங்களாக வடமாகாண சபை செயற்பட்டு வந்த நிலையில் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும்இ இதற்கு வடமாகாண அவைத்தலைவர் உள்ளிட்ட பலரும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு