பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நித்தியானந்தாவை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் - Admin
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நித்தியானந்தாவை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில்உள்ள, ராம்நகர் பிடதி தியான பீடத்துக்கு வந்த பெண் பக்தைகளை, நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக, செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, நித்யானந்தாவுக்கு பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும் ஆஜராகவில்லை.

இதனால், ஜாமினில் வெளிவர முடியாத, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இதை ரத்து செய்யும்படி, நித்யானந்தா தரப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு, வாரன்ட்டை ரத்து செய்தது. ஆனால் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, தனக்கு விலக்களிக்கும்படி, நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் நிராகரித்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு