கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள் புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கி வைப்பு

கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள் புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கி வைப்பு
சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான வசந்த சந்திரபாலவினால் எழுதி வெளியிட்ட 'கடுலின் நோசெதுனு மாதம' என்ற புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டது.கடந்த கால யுத்த நிலைமைகளை எதிர்கொண்ட குறித்த பத்திரிகையாளர் அவரது அனுபவங்களை குறித்த புத்தகத்தில் எழுதியுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் அவர் செய்த சேவைக்காகவும் குறித்த புத்தக வெளியீட்டையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாராட்டினார்.
இவர் அம்பாறை மாவட்டத்தை வதிவிடமாக கொண்டுள்ளதுடன் 30 வருட அனுபவமுள்ள உள்நாட்டு போரில் பல்வேறு சாட்சிகளை கொண்ட ஊடகவியலாளர் ஆவார்.அத்துடன் போர் கால செய்திகளின் ஊடாக தான் பெற்ற அனுபவங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கில் தமிழில் கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள் என்ற பொருள் படும் ('කඳුළින් නොසේදුණු මතක') என்ற தலைப்பில் இப்புத்தகம் தற்போது சந்தையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் வசந்த சந்திரபாலவினால் அம்பாறை நகர மண்டபத்தில் நடாத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி( "வனதிவி சரணிய") (Wildlife Photography) பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கடின முயற்சியுடன் கூடிய அர்ப்பணிப்புடன் அழகிய முறையில் ஒவ்வொரு புகைப்படங்களையும் ஆவணமாக்கி வாசகர்களின் பாராட்டினை அவர் பெற்றிருக்கின்றார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் வசந்த சந்திரப்பால கடந்த பல வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பல அனுபவங்களுடன் சிறப்பாக செயற்படுவதுடன் அவர் சிறந்த தத்துரூபமான புகைப்பட கலைஞர் ஆவார்.இலங்கையில் பிரபலமான தொலைக்காட்சிகளான ஹிரு அத தெரண தொலைக்காட்சிகளில் பிராந்திய செய்தியாளராகவும் செயற்பட்டு வருவதுடன் தேசிய பத்திரிகைகள் வானொலி இணையங்களிலும் ஊடகவியலாளராக செயற்படுகின்றார்.
குறித்த கண்காட்சியில் இறைவனின் படைப்புகளில் உள்ள ஒவ்வொரு விநோதங்களையும் ஒரு வில்லை ஊடாக ஒவ்வொரு புகைப்படங்களும் அவரது ஆற்றலையும் புதிய யுக்திகளையும் கொண்டு உயிரோட்டமாக மிளிர்கின்றது.இயற்கையான காடுகளில் உள்ள மிருகங்கள் பறவைகள் அவற்றின் வாழ்விடங்கள் முதல் அவற்றின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து அழகாக புகைப்படமாக்கி ஆவணப்படுத்தியுள்ளமை இக்கண்காட்சியின் சிறப்பம்சமாகும்.இதே வேளை பொழுது போக்கிற்காக பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சென்று தனிமனிதனாக நின்றும் இரவு நேரங்களில் கூட அழகிய முறையில் புகைப்படங்கள் எடுத்திருக்கின்றார். இக்கண்காட்சியில் பார்ப்பதற்கு அரிய பறவைகள் விலங்குகள் உள்ளிட்டவைகளை கூட அருமையாக பல்வேறு சந்தர்ப்பங்களில் புகைப்படமாக்கப் பட்டுள்ளதுடன் பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றிருக்கின்றது.
இவ்வாறான பல அரிய புகைப்படங்களை சிறந்த அழகிய உள்ளுணர்வுடன் மிகுந்த கடின முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் ஆவணமாகி உள்ள சிறந்த தத்துரூபமான புகைப்பட கலைஞரும் ஊடகவியலாளருமான வஸந்த சந்திரபாலவின் கண்காட்சியை அம்பாறை பிரதேச நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் உட்பட பல தரப்பினரும் பார்வையிட்டு பாராட்டி வருகின்றனர்.