தேர்தல் கூட்டுக்கும் பேரவைக்கும் தொடர்பு இல்லை! - முதலமைச்சர்
கஜேந்திரகுமார் – சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கியிருக்கும் தேர்தல் கூட்டுக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பேரவை இதற்குப் இணங்காது என்றும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
‘‘தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் அரசியல் முன்னணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கூறியிருக்கின்றார் களே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வினவப்பட்ட போது, ‘‘தமிழ் மக்கள் பேரவைக்கும் இதற்கும் தொடர்பில்லை. என்ன விதத்தில் அவ்வாறு கூறினார் களோ தெரியவில்லை. என்ன அடிப்படையில் அப்படிச் சொல்லியுள்ளார்கள் என்பதை நான் அறியவேண்டும். ஆனாலும் தமிழ் மக்கள் பேரவை இதற்கு இணங்காது. நான் இது தொடர்பில் மற்றொரு இணைத் தலைவரான மருத்துவர் பூ.லக்ஸ்மனுடன் பேசுவேன்’’ என்று பதிலளித்துள்ளார் முதலமைச்சர்.