யாழ் - கொழும்பு பேருந்துகளுக்கு விசமிகள் செய்த காரியம்! -
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கியும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கியும் சென்று கொண்டிருந்த இரண்டு அரை சொகுசு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம், பண்டுலகம பிரதேசத்தில் வைத்து அடையாளம் காணப்படாத சிலர் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்வீச்சு தாக்குதல் காரணமாக இரண்டு பேருந்துகளின் யன்னல் கண்ணாடிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.
சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட சிலர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்