காலவரையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் குதிக்கும் இலங்கை போக்குவரத்துச் சபை வடபிராந்திய ஊழியர்கள்

ஆசிரியர் - Admin
காலவரையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் குதிக்கும் இலங்கை போக்குவரத்துச் சபை வடபிராந்திய ஊழியர்கள்

வடமாகாண முதலமைச்சரின் போக்குவரத்துத் துறை சார்ந்த தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளின் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து புதுவருட தினமான நாளை மறுதினம் திங்கட்கிழமை(01) முதல் காலவரையற்ற பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அருளானந்தம் அருட்பிரகாசம் சற்று முன்னர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதன் காரணமாக வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சேவையின் சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்தியை எமது செய்திச் சேவையில் எதிர்பாருங்கள்...

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு