யாழ். வணிகர் கழகம் பொதுமக்களின் நன்மை கருதி விடுக்கும் அதிமுக்கிய அறிவித்தல்

ஆசிரியர் - Admin
யாழ். வணிகர் கழகம் பொதுமக்களின் நன்மை கருதி விடுக்கும் அதிமுக்கிய அறிவித்தல்

யாழ். வணிகர் கழகம் பொதுமக்களின் நன்மை கருதி இன்றைய தினம்(30) அதிமுக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

நாணயத்தாள்களில் கையால் எழுதப்பட்ட அல்லது வர்ணம் தீட்டப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்கள் நாளை மறுதினம் 01.01.2018 ஆம் திகதியுடன் மத்திய வங்கியினால் செல்லுபடியற்ற நாணயத்தாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறான நாணயத்தாள்கள் இருப்பின் வர்த்தகர்கள், பொதுமக்கள் நாளை மறுதினம் நண்பகல் வரை வங்கிகளில் அல்லது வங்கிகளிலுள்ள தன்னியக்க இயந்திரங்களில் (ஏ.ரி.எம்) வைப்பிலிடுமாறு யாழ். வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளை மறுதினம் நண்பகல் வரை மட்டுமே இப் பணத்தை வைப்பிலிடும் வாய்ப்பு காணப்படுவதால் இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு