மண்டைதீவு கடலில் மீனவர் மரணம்!
மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். 2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் வயது (64) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
நேற்று உயிரிழந்த குறித்த நபர் தனது மைத்துனருடன் மண்டைதீவு துறைப்பகுதியில் இருந்து 1 கிலோ மீற்றர் தொலைவில் மீன்பிடித்துள்ளார்.
அவருக்கு ஒவ்வாமை காரணமாக திடிரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மைத்துனர் அழைத்துச் சென்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டுள்ளார்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இறப்பு விசாரணையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.