உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்!

ஆசிரியர் - Admin
உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்!

நடை­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தல். அபி­வி­ருத்­தி ­பற்­றித்­தான் இங்கு பேச­வேண்­டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கூட்­டாட்சித் தீர்வு பற்­றியோ பேச­வேண்­டிய தேவை­கள் இல்லை. எங்கு எத­னைப் பேசு­வது என்று தெரி­யா­மல் நிற்­கின்­றார்­கள் என்று ரெலோ தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார்.

நல்­லூர் இளங்­க­லை­ஞர் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அனைத்­துக் கட்­சி­க­ளும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைத்­தான் எதி­ரா­ளி­யா­கப் பார்­கின்­றார்­கள். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­குப் பலர் கங்­க­ணம் கட்­டிக் கொண்டு கள­மி­றங்­கி­யி­ருக்­கின்­றார்­கள். தென்­னி­லங்கை கட்­சி­களை விமர்­சிப்­பது குறை­வா­கவே இருக்­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மாத்­தி­ரம்­தான், தனது இனம் சார்ந்த பிரச்­சி­னை­களை முன்­கொண்டு செல்­லும் கட்­சி­யாக இருக்­கின்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு யாரை­யும் விமர்­சிப்­பது இல்லை. இத­னால்­தான் எங்­கள் மீது விமர்­ச­னங்­களை அதி­க­மாக இருக்­கின்­றன. காய்க்­கின்ற மரத்­துக்­குத்­தான் கல்­லெறி விழும். புதிய அர­ச­மைப்­பில் எங்­க­ளுக்கு என்ன தேவை என்­பதை, இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தில் நாங்­கள் தெளி­வா­கவே கூறி­விட்­டோம்.

தமிழ் மக்­க­ளின் ஆயு­தப் போராட்­டத்தை மௌனிக்­கச் செய்­ய­தது பன்­னாட்­டுச் சமூ­கம். சர்­வா­தி­கா­ர­மா­கச் செயற்­பட்ட மகிந்­தவை மாற்­றி­ய­மைத்­தது பன்­னாட்­டுச் சமூ­கம். அந்­தப் பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் நாங்­கள் சில விட­யங்­க­ளைக் கேட்­ப­தா­யின் புதிய அர­ச­மைப்பை நாங்­கள் குழப்­பாத வகை­யில் நடந்­து­ கொள்­ள­ வேண்­டும். எங்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு கிடைக்­கா­த­போ­து ­தான் நாம் பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் கேள்வி கேட்­க­மு­டி­யும்.

தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­க­ளைக் கூட்­ட­மைப்பு எந்த இடத்­தி­லும் அட­மா­னம் வைத்­துச் செயற்­ப­ட­வில்லை. நாங்­கள் ஒரு சில இடங்­க­ளில் அர­சு­டன் இணக்­கத்­து­டன் செயற்­பட்டு வரு­கின்­றோம். அதற்­காக அர­சின் அடி­வ­ரு­டி­க­ளாக இருக்­க­வில்லை. இணங்­கிச் செயற்­பட்­ட­தால்­தான் இடைக்­கால அறிக்கை வெளி­வந்­தி­ருக்­கின்­றது.

ஒற்­று­மை­யின் பலத்தை நாங்­கள் காண்­பிக்க வேண்­டிய இந்­தத் தரு­ணத்­தில், எங்­க­ளைத் தோற்­க­டிக்­கக் கங்­க­ணம் கட்­டிக் கொண்டு பலர் செயற்­ப­டு­கின்­றார்­கள். சம்­பந்­தன் ஐயா­வைப் பலர் விமர்­சிக்­கின்­றார்­கள். ஐயாவை விமர்­சிப்­ப­வர்­களை ஒரு­போ­தும் மன்­னிக்க முடி­யாது. தமிழ் மக்­க­ளின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தற்­காக எவ­ரு­ட­னும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடி­ய­வர் அவர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய தலை­வர்­க­ளுக்­கும் இது தெரி­யும்.

சம்­பந்­தன் ஐயா­வின் காலத்­தில் தீர்வு வர­வேண்­டும் என்று நாங்­கள் நினைக்­கின்­றோம். என்­னு­டைய காலத்­தில் எதை­யா­வது பெற்­றுக்­கொ­டுத்­து­வி­ட­வேண்­டும் என்று நினைக்­கின்ற தலை­வர் அல்­லர் சம்­பந்­தன். நியா­ய­மான தீர்­வுக்­காக அவர் போரா­டு­கின்­றார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புச் சரி­யான பாதை­யில்­தான் செல்­கின்­றது. உண்மை வெல்­லும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு காலம் பதில் சொல்­லும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மக்­கள் கூறிய ஆணையை நிறை­வேற்­றும்­போது மக்­கள் மத்­தி­யில் கூட்­ட­மைப்பு தொடர்­பாக இருந்த விமர்­ச­னங்­கள் அகன்று மக்­கள் கூட்­ட­மைப்பை விளங்­கிக் கொள்­வார்­கள் என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு