கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டிகளை ஒட்டிய இரண்டு இளைஞர்கள் கைது!

ஆசிரியர் - Admin
கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டிகளை ஒட்டிய இரண்டு இளைஞர்கள் கைது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் தர்சானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய போதே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு