வட்டுக்கோட்டையில் வாளுடன் சிக்கிய இளைஞர் மக்களால் நையப்புடைப்பு

ஆசிரியர் - Editor II
வட்டுக்கோட்டையில் வாளுடன் சிக்கிய இளைஞர் மக்களால் நையப்புடைப்பு

வாளு­டன் நட­மா­டிய ஒரு­வர் இளை­ஞர்­க­ளால் மடக்­கிப் பிடிக்­கப்­பட்டு நையப்­பு­டைக்­கப்­பட்­டார். மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­வர் நன்­றா­கக் கவ­னிக்­கப்­பட்­டுப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை வட்­டுக்­கோட்டை, கள்ளி வீதி­யில் நடந்­துள்­ளது.

வட்­டுக்­கோட்­டைப் பகு­தி­யில் சிலர் வாள்­க­ளு­டன் நட­மா­டி­யுள்­ள­னர். அதை அவ­தா­னித்த பிர­தேச இளை­ஞர்­கள் அவர்­க­ளைப் பிடிக்க முயற்­சித்­த­னர்.

ஒரு­வர் அகப்­பட்­டுக் கொள்ள ஏனை­யோர் தப்­பிச்­சென்­று­விட்­ட­னர். மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­வரை நன்­றா­கக் கவ­னித்த மக்­கள் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.சிக்­கிக் கொண்­ட­வர் மானிப்­பா­யைச் சேர்ந்­த­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வட்­டுக்­கோட்டை, சித்­தன்­கேணி, வட­லி­ய­டைப்பு, சங்­கானை ஆகிய பகு­தி­க­ளில் அண்­மை­யில் நடந்த கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளு­டன் இவ­ருக்­குத் தொடர்­பி­ருக்­க­லாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன. தப்­பிச் சென்­ற­வர்­க­ளும் கைது செய்­யப்­ப­டு­வார்­கள். நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்று வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.கள்ளி வீதி­யில் கடந்­த­வா­ரம் கொள்ளை முயற்சி ஒன்று நடந்­தி­ருந்­தது.

அங்­கி­ருந்த வீடொன்­றில் வசித்த பெண்­ணின் கழுத்தை நெரித்­துக் கொள்­ளை­யிட முயன்­ற­போது அந்­தப் பெண் அவ­லக் குரல் எழுப்­பி­னார். அதை­ய­டுத்­துக் கொள்­ளை­யர்­கள் தமது முயற்­சி­யைக் கைவிட்­டுத் தப்­பிச் சென்­றி­ருந்­த­னர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு